இந்திய அணி படுதோல்வி : தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து!!

459

ENG

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி 148 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து.

இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 385 ஓட்டங்கள்கள் எடுத்து இருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 486 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து. இங்கிலாந்து அணியை விட 338 ஓட்டங்கள் பின் தங்கிய இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியமால் இந்திய வீரர்கள் 94 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகர்களாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.