முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : கனகசபை தங்கம்மா!!

448

கனகசபை தங்கம்மா
பிறந்த இடம் – மாமடு
வாழ்ந்த இடம் – மாமடு சந்தி வவுனியா

 

அன்று எங்கள் அழுகை சத்தம் கேட்டு
சிரித்தவளே
இன்று அழகின்றோம் சிரிப்பதற்கு நீ
இல்லையென்று..
நீ இல்லாத உலகில் மட்டும்
தவிக்க விட்டு சென்றாயே அம்மா
நீ மீண்டும் கிடைக்காத
பொக்கிஷம் அம்மா..
உயிருக்குள் அடைகாத்து
உதிரத்தை பாலாக்கி
பட்டினியுடன் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே மட்டும்
வாழ்ந்து முடித்த அம்மாவே..
பேசியும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் வாழ்ந்து
முடித்த அம்மாவே..
அம்மா உன்னை இழந்து
ஆண்டு ஒன்று முடிந்தது
உங்கள் இழப்பை மறக்க முடியாத
பிள்ளைகளாக பேரப்பிள்ளைகளாக
எங்கள் இதயத்தில் உங்களை
சுமந்து திரிகிறோம்..
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் கூட
அனாதையாய் உணர்கிறோம்
அம்மா நீ இல்லாததால்
உங்கள் இழப்பால் தவிக்கும்

பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்.