ராஜஸ்தானில் கணவன், மனைவி மற்றும் இரு மகன்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லால் மேக்வால்(வயது 35), இவரது மனைவி கவிதா( வயது 32), இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர்.
கடைசி மகனான ராமதேவ்(வயது 8) என்பவருக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக நேற்று காலை நால்வரின் உடல்களும் வீட்டின் அருகில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
செவ்வாயன்று மாலை இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது, அன்றைய தினம் மேக்வால் தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நிலையில் இது நடந்துள்ளது.
மேக்வால் மற்றும் கவிதா இருவரும் தங்களது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
அவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், மூன்று பேர் இதற்கு காரணம் என்றும், மேக்வாலின் இளைய சகோதரர் காரணம் எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய கவிதாவின் மாமா, மேக்வால் தனியாக வீடு கட்ட நினைத்தார் என்றும் இதற்கு தாய் மற்றும் இளைய சகோதரர் தடையாக இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து வருகிறது.