
இஸ்ரேலில் விவசாய தொழில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்ஸானது இஸ்ரேலில் உள்ள கிரியேட் மலாக்கி என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை (18) காலை பயணித்துக்கொண்டிருக்கும் போது பஸ்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்ஸில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தின் போது பஸ்ஸில் இருந்த இலங்கையர்கள் ஜன்னல்களை உடைத்து பஸ்ஸிலிருந்து வெளியே குதித்து தங்களது உயிரை காப்பாற்றியுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த தீ விபத்தின் போது ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.





