
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள தாலிஸ் தீவில் மனாடோ துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுமார் 280 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மனாடோ நகரின் நீர்நிலைகளுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த கே.எம். பார்சிலோனா 5 என்ற கப்பல், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது கப்பலில் 280 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மூவர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.
TERRIFYING SCENES: Ferry carrying 280 people bursts into flames off Indonesia, forcing passengers to jump into sea. Rescue crews save over 260, search ongoing for missing. 18 injured, including children. pic.twitter.com/C3NnE6tMKN
— Breaking911 (@Breaking911) July 20, 2025





