15 வயது மாணவியை தூக்கிச் சென்று உயிரோடு தீ வைத்து எரித்த இளைஞர்கள்!!

1030

ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு அந்த சிறுமி தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

பார்கவி நதி சாலையில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் 3 இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்று, தூக்கி வைத்து தீ மூட்டியதாக தெரிகிறது.

இந்த கொடூர தாக்குதலில் சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகள் தீக்காயங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு மக்கள் விரைந்து சென்று தீயை அணைத்து, முதலில் பிபிலி CHC மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது சிறுமி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். இவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் இது வரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் பலங்கா காவல் நிலையத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ தூரத்தில் நடந்தது.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், சிறுமிக்கு எவருடனும் எந்தவிதமான தனிப்பட்ட தகராறுகளும் இல்லை.

இது காதல் பழிவாங்கும் குற்றம் அல்ல என தெரிவித்துள்ளனர். இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், சிறுமியின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

இச்சம்பவம் குறித்து ஒடிஷா துணை முதல்வர் பரவதி பரிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சை செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.