வவுனியா ஒமந்தையில் இளைஞன் நஞ்சருந்தி மரணம் : பொலிஸார் விசாரணை!!

1944

வவுனியா ஒமந்தை கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு கிராமத்தில் நேற்றையதினம் (24.07.2025) இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் வசிக்கும் 18வயதுடைய கெ.சிவரஞ்சன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.