காணாமல் போன தங்கச் சங்கிலியை மீள ஒப்படைத்த நல்லுள்ளங்கள்!!

782

மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன 4 கிராம் தங்க கைச் சங்கிலி உரியவரிடம் நேற்று(25) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர் மூதூர் பொழுதுப் போக்குவக்கு வந்திருந்த சமயம் அவர்களுடைய தங்க கைச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட சிலர் தங்கக் சங்கிலியை கண்டெடுத்து மூதூர் பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் முன்னிலையில் தங்கச் சங்கிலியை கண்டெடுத்த நபர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.