
மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம் நாலசோபரா கிழக்கில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு அமைந்துள்ளது.
இந்தக் குடியிருப்பில் 3 வயது சிறுமி, 12வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தற்போது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 22ம் தேதி இரவு 8.20 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் சிறுமிக்கு காலணிகள் அணிவித்துள்ளார். அப்போது அவளை காலணி பெட்டியில் நிற்க வைத்துள்ளார்.
ஆனால் அந்த பெட்டியின் பின்புறம் திறந்திருந்ததால், சிறுமி சமநிலையை இழந்து நேராக 12வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிகிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது ஒரு விபத்துச் சம்பவம் என்றும், யாரையும் குற்றவாளியாக கருதவில்லை என்றும் சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிகழ்வு, உயர கட்டிடங்களில் சிறுவர் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் முக்கியமான நினைவூட்டலாக கருதப்படுகிறது.
#INDIA: #Maharashtra: Tragic accident in #Vasai
Mother made her 4 year old daughter sit near the window… she lost her balance and fell from the 12th floor #died on the spot.
The entire incident was captured on CCTV, people were shocked after watching the video. pic.twitter.com/ele0fiv9En— CMNS_Media⚔️ #Citizen_Media🏹VEDA 👣 (@1SanatanSatya) July 25, 2025





