பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் – பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!!

482

மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையன் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.

முயற்சியின் நோக்கம்

25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.