மகள் உயிரிழந்ததால் வரதட்சணையை திரும்ப வழங்க கோரி போராட்டம்!!

692

தெலங்கானா மாவட்டத்தில், திருமணமான 3 ஆண்டுகளில் மகள் உயிரிழந்ததால், வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பெண், தனது தந்தையுடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள், சுரேஷ் வீட்டின் முன் இருவரது சடலங்களையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.