கொழும்பில் வாகனங்கள் மீது பவுசர் மோதியமையால் பரபரப்பு : ஒருவர் பலி : ஐவர் படுகாயம்!!

906

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு பவுசர் பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பவுசரின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.