
ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் நகரத்தை நான்காவது சுனாமி அலை அடைந்துள்ளது.
இதன்போது, மின் இணைப்பு சேதமடைந்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்றாவது அலை மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், இது நிறைய சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நான்காவது அலை பலவீனமானது தான் எனவும் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது அலை, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன் முழு சிறிய கடற்படையும் கடலுக்குள் இழுக்கப்பட்டது, அது இப்போது ஜலசந்தியில் இருந்த சில கப்பல்கள் கரை ஒதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்வதாகவும், கம்சட்கா அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவெரோ-குரில்ஸ்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, சுனாமி அபாய மண்டலத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரஷ்யாவின் குறித்த பிரதேசங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவுகள் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.





