வவுனியா சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தின் நூலகம் அங்குரார்ப்பணம்!!

1330

வவுனியா சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தின் நூலகம் அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன் போது சனசமூக நிலைய நூலகத்திற்கு வவுனியா பொது நூலகம் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், ஓய்வு நிலை அதிபர் த.பூலோகசிங்கம் அவர்கள் ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்பாக வழங்கி வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் சி.அருணன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.ஐங்கரன், வவுனியா பொது நூலகத்தின் நூலகர் சார்பில் உதவி நூலகர் சுதர்சன், இறம்பைக்குளம் கிராம சேவகர் பவித்திரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்ஷிகா,

வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய அதிபர் பா.நேசராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.