ஹோட்டலில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

876

அனுராதபுரத்தில் மனித பாவனைக்கு எதிரான முறையில் செயற்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பகுதியிலுள்ள பிரபலமான உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்த பிரைட் ரைஸில் இரண்டு அடி நீள நூல் இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர் செய்ய முறைப்பாடுக்கு அமைய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொது சுகாதார ஆய்வாளர்கள் உணவை ஆய்வு செய்து, கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

கெக்கிராவ மருத்துவமனைக்கு எதிராக அமைந்துள்ள உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, கலேவெல பகுதியில் வசிக்கும் சுகாதார சேவை அதிகாரி ஒருவர், தனது மகளுடன் உணவகத்தில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்துள்ளனர்.

அதனுள் நூல் ஒன்றினை கவனித்த அதிகாரி அது தொடர்பில் உணவக ஊழியர்களிடம் தெரிவித்தார். எனினும் ஊழியர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கெக்கிராவ தலைமை பொது சுகாதார ஆய்வாளர் அருணா ரணசிங்கவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஹோட்டலில் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த உணவில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள ஒரு நூலை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த ஹோட்டலுக்கு எட்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உணவைப் பெற்ற சுகாதாரப் பணியாளர், நூலை அதனுடன் சேர்த்து சாப்பிட்டிருந்தால், அது வயிறு வழியாகவும் குடலிலும் சென்றிருக்கும் என்றும், அறுவை சிகிச்சை கூட தேவைப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.