செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு : கண்கலங்க வைத்த நிமிடங்கள்!!

911

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி நேற்றையதினம் (06.08.2025) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ,எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.