
களுத்துறையில் அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் சீலானந்த வீதியிலுள்ள ரயில் கடவையில் சிறிய வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (09.08.2025) இடம்பெற்றுள்ளது. வேனை செலுத்தி சென்ற பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் மீதே சிறிய வேன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.





