
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான “Miss Tourism Universe” போட்டியில் பங்குபற்றி “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஆதித்யா வெலிவத்த என்ற பெண் இன்று திங்கட்கிழமை (11) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற “Miss Tourism Universe” போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 17 அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.
“Miss Tourism Universe” போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆதித்யா வெலிவத்த என்ற பெண்ணும் பங்குபற்றியிருந்தார்.
ஆதித்யா வெலிவத்த என்ற பெண் “Miss Tourism Universe” போட்டியில் “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், ஆதித்யா வெலிவத்த என்ற பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.





