கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!!

594

களுத்துறை, அளுத்கமை, மொரகல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11.08.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.சம்பவத்தன்று, வெளிநாட்டுப் பெண் மேலும் சில நபர்களுடன் இணைந்து மொரகல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

பின்னர், நீரில் மூழ்கி காணாமல்போன வெளிநாட்டுப் பெண்ணின் சடலம் பெந்தர கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.