யாழில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் : மேலதிக விசாரணையில் பொலிஸார்!!

1125

யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு முதலாம் வட்டார பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் என்ற 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10.08.2025) இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில்,

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.