கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி!!

822

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலையைச் சேர்ந்த குழந்தையின் குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இநிலையில் இன்று (13) கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்தது.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் மாணவியே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.