இளம் தம்பதியின் மோசமான செயல் : பொலிஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

857

சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் குறித்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துக் குறித்த போதைப்பொருட்களை விநியோகம் செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினரை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.