
வவுனியா மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (12.08.2025) காலை இடம்பெற்றது.

மாநகரசபையினால் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளையும் மக்களின் பிரதேசங்களுக்கே சென்று நேரடியாக வழங்கும் நோக்கில் குறித்த நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள்திருத்தம், சேதனப் பசளை விற்பனை, கழிவகற்றும் சேவைகள்,

மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு, வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள் உள்ளடங்கலாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்பிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்மொழிவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சேவையில் பெருமளவான வட்டாரமக்கள் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.

நிகழ்வில் வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன், துணை முதல்வர் ப.கார்த்தீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.






