விபத்தில் பலியான தம்பதி நிர்க்கதியாக தவிக்கும் 3 குழந்தைகள்!!

732

ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் 35 வயது சையத் வாஹீத் . இவர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி 27 வயது சனா பேகம். இவர்கள் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர்கள் குடும்பத்துடன் சமீபத்தில் சையத் வாஹீத் தனது மனைவியின் தம்பியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று இருந்தார்.

ஜூலை 24ம் தேதி அபுதாபி வந்தனர். சையத் மற்றும் சனா ஆகியோர் அமீரகத்தை தங்கள் சொந்த ஊராக கருதி 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்துடன் அபுதாபியில் வசிக்கும் மனைவியின் மற்றொரு தம்பி வீட்டிற்கு சென்று விட்டு, தான் வசிக்கும் அல் ருவைஸ் பகுதிக்கு சையத் காரில் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பிறகு அருகில் இருந்த இரும்பு தூணில் மோதி நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் சிக்கி சையத் மற்றும் சனா ஆகியோர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வயது ஆண் குழந்தை, பெண் குழந்தைகளான 2 வயது சாதியா மற்றும் 7 வயது சித்ரா பேகம் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பலியான தம்பதியின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. பெற்றோர் உயிரிழந்தது கூட தெரியாமல் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.