
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ். இங்குள்ள ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிவேகமாக சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.





