
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று ரூ.70 விலை குறித்த தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) ரூ.500,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள், கடந்த 16 ஆம் திகதி துறைமுக நகரத்தில் உள்ள கடைகளை பரிசோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட கடையில் ரூ.70 விலை குறித்த 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை
2025.04.01 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண்.2430/15 மற்றும் எண்.93 இன் 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) இன் கீழ் அதிக விலைக்கு விற்பனை செய்தமை குற்றமாகும்.





