மகளின் திருமணம் நடந்த நாளில் தாய் மயங்கி சரிந்து விழுந்து பலி!!

366

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

மகள் தன்னை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கல்யாணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நட த்தி வருகிறார்.