
வவுனியா மில் வீதியில் நேற்று (22.08.2025) இரவு 9 மணியளவில் பற்றரி விற்பனையகம் திடீரென தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் மின்சார ஒழுக்கு என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தக நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு வர்த்தக நிலையத்தினுள் பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபையினர் மற்றும் மாநகர தீயனைப்பு பிரிவினர் தீ விபத்து மேலும் பரவலையும் இடங்களை பார்வையிட்டதுடன் மின்சாரத்தினை துண்டிக்கும் முகமாக மின்சார சபைக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.






