17 வயது இளைஞனின் மரணத்தால் தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு!!

1019

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கறுவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று (26) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.