நீண்ட வாதத்திற்குப் பின் ரணிலுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!!

541

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை சற்று முன்னர் பிறப்பித்துள்ளார்.

சீரற்ற உடல்நிலை காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையானார்.

இதற்கடுத்த வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.