காதலன் கண்முன்னே மாடியிலிருந்து குதித்த இளம்பெண்!!

498

சென்னையில் காதலன் கண் எதிரிலேயே வீட்டின் மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,

இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்தரின் மகள் ஹர்ஷிதா (23). இவர் வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தர்ஷன் (26) என்ற வாலிபரை காதலித்தார்.

இருவரும் பட்டதாரிகள் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இணையதளம் மூலமாக அறிமுகமாகி காதலாகி செல்போனில் தொடர்ந்து பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு பெற்றோர்களும் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தினமும் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்துக்கு தடை ஏற்பட்டது.

இளம்பெண் ஹர்சிதா திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று முக்கியமான நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு தர்ஷன் முடியாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதையொட்டி காதலர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்ஷிதா கடந்த சனிக்கிழமை இரவு காதலன் தர்ஷனை அவரது வேப்பேரி வீட்டில் சந்தித்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் சமாதானமாக பேசி உள்ளனர்.

ஆனால் ஹர்ஷிதா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. தர்ஷனும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷிதா திடீரென்று மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து, தர்ஷனைக் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில் தர்ஷன் கொடுத்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அதில், “எங்கள் குடும்பம் கெளரவமானது. அப்பா தொழிலதிபர். அண்ணன் ஆடிட்டராக உள்ளார்.

ஹர்ஷிதா மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் அவரோடு உள்ள காதல் உண்மையானது. அதனால் தான் எனது பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு ஹர்ஷிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றும், எனது பெற்றோரிடம் பேசக் கூடாது என்றும் ஹர்ஷிதா நிபந்தனை விதித்தார்.

நான் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என்றார். அவரை பற்றி புகழ்ந்து வாட்ஸ் அப்பில் 1,000 வார்த்தைகளை பதிவிட வேண்டும் என்றார். அவருடைய அனுமதி இல்லாமல் செல்போனில் கூட யாரிடமும் நான் பேசக் கூடாது என்றார்.

ஏற்கனவே அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடைசியில் நின்று போய் உள்ளது. ஹர்ஷிதாவின் செயல்கள் தான் அதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தை என்னிடம் மறைத்து விட்டார்கள்.

ஹர்ஷிதா, எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவார். சமீபத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீட்டை விட்டு சென்று விட்டார். அவரது தாயார் என்னை உதவிக்கு அழைத்தார்.

நான் சமாதானம் பேசி ஹர்ஷிதாவின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினேன். தற்கொலை மனப்பான்மையுடன் அவர் செயல்பட்டது எனக்கு அச்சத்தை உண்டாக்கியது.

இது குறித்து அவரது பெற்றோரிடமும் பேசினோம். திருமணத்தை நிறுத்துவது என்று இருதரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இது பற்றி பேசுவதற்காகவே ஹர்ஷிதா எங்கள் வீட்டுக்கு வந்தார்.

ஆனால் பேசிக் கொண்டிருந்த போதே மாடிக்கு ஓடினார். நானும் அவரை பின்தொடர்ந்து துப்பட்டாவை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்தேன். இது அவரது உறவினர்களுக்கும் தெரியும்.

ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எங்கள் குடும்பத்தை பிடிக்காத சிலர் போலீசாரிடம் என்னை பற்றி தவறாக தகவல் கொடுத்து விட்டனர்.

ஹர்ஷிதாவின் சாவுக்கு நான் காரணம் இல்லை. இது அவரது பெற்றோருக்கே நன்கு தெரியும். எனவே இறுதியில் உண்மை வெல்லும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஹர்ஷிதா தற்கொலை செய்ய மாடிக்கு ஓடியதும், அவரை காப்பாற்ற தர்ஷன் பின்தொடர்ந்து ஓடுவதும், துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தர்ஷனின் குடும்பத்துக்கு எதிரான நபர்கள் அவரது அண்ணன் புகைப்படத்தையும் இணையதளத்தில் தவறாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.