மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து : நால்வர் படுகாயம்!!

1090

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05.09.2025) அதிகாலை ஏ-09 வீதியின் பனிக்கன் குளம் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த பாரஊர்தி மோதி விபத்து ஏற்பட்ட அதே நேரம் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் பாரஊர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.