
நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. பேருந்தின் , ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
தனியார் சொகுசு பேருந்து மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன்பகுதி பெரும் சேதமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.





