தண்டவாளத்திலிருந்து விலகி லொறியுடன் மோதிய புகையிரதம் : ஒருவர் காயம்!!

851

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (09.09) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கப் பயணித்த ரயில் ஒன்று புவக்பிட்டிய மற்றும் அவிசாவளைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி இளநீர் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அதிகாலை 4.25 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதனால் குறித்த ரயில் வீதியில் ரயில் போக்குவரத்துகள் கொஸ்கமவரை மட்டுப்படுத்தப்பட்டதுடன், விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதன் பின்னர் மீள ரயில் சேவை வழமைக்கு திரும்பியது.