காரில் தப்பி ஓடிய காதல் தம்பதியை துரத்திச் சென்று மண்டையை உடைத்த உறவினர்கள்!!

456

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியில் வசித்து வரும் முருகன் மகள் பிரியராகினி தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்லும் போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் செப்டம்பர் 4ம் தேதி, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டது. பிரியராகினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காதல் ஜோடியை தேடத் தொடங்கினர்.

உடனடியாக காதல் ஜோடி, சேலம் மாவட்ட எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடையலாம் என காரில் புறப்பட்டனர்.

டோல்கேட்டில் வைத்து, அவர்களை பிடிப்பதற்காக சிலர் தயாராக இருந்தனர். கார் மாற்றுப்பாதையில் பறந்தது. அங்கும் ஒரு வேறு கும்பல் காத்திருந்து விரட்டத் தொடங்கியது.

மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்று விட்டதால், காரில் இறந்து கீழே இறங்கி ஓடத் தொடங்கிய காதல் ஜோடியை துரத்திச் சென்று மடக்கி பிடித்த கும்பல், சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கலைச்செல்வன் மயங்கி சரிந்தார்.

பிரியராகினி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தது. அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயமடைந்த கலைச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.