புகையிரதக் கடவையில் புகையிரதம் மோதி வயோதிபர் பலி!!

588

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி – பூஸா பிரதேசத்தைச் செர்ந்த 68 வயதுடைய வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபர் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.