12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

548

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ.

சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.

இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.

பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.

அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.

இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.

பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.

அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.