சீகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு நேர்ந்த கதி!!

528

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.