
உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.
இவ்வாறு இறந்தவர் சம்பூர் கிழக்கு, மூதூரில் வசித்து வந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





