நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம் : உயிரிழந்தது யார்?

631

மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22.09.2025) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.