காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை பரிதவிக்கும் பிள்ளைகள்!!

536

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள்.

அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அருள் பாண்டி கள்ளத்தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது. அருள்பாண்டி, யாருக்கும் தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் அருள்பாண்டி தனது அவரை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, தனது மனைவி அம்முவிடம் `இனிமேல் இவர் என்னுடன் தான் வாழ்வார்’ என கூறினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், மனவேதனை அடைந்த அம்மு வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.