
வடக்குமாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தகசந்தை வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று(26.09.2025) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.ஏ,சரத்சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இச்சந்தையில் உள்ளூர் உற்பத்திகள் உட்பட 50ற்கும் மேற்ப்பட்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக நாளையதினமும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தொழிற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வவுனியா மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.






