விஜயின் பேரணியில் நடந்த துயரம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!!

444

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தவெக பேரணி நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.