வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாடு!!

1207

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் மாவட்ட மாநாடு சுத்தானந்த இந்துஇளைஞர்சங்க மண்டபத்தில் நேற்று (05.10.2025) காலை இடம்பெற்றது.

உலக ஆசிரியர் தினமான நேற்று அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளை முறியடித்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.

சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் பா.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தலைவர் பிரியந்த பெர்ணான்டோ, வடமாகாண உபதலைவர் தீசன் திலீபன், உபதலைவி ரசிக்கா உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.