வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : 18 வயது இளைஞன் மரணம், இருவர் வைத்தியசாலையில்!!

3238

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்றது. வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி இவ்வாறு வாகனம் ஓட்டுபவர்கள், தம் உயிரை போக்குவது மட்டுமன்றி வீதியில் செல்வோரிற்கும் உயிராபத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.