
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறிப்பாக மேற்கு மாகாணமும் தென் மாகாணமும் இந்த நோய்கள் பரவுவதற்கான அதிக அபாயப்பகுதிகளாக காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்துள்ளார்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்பு வழி நோய்களின் பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நுளம்பு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





