இளம்பெண் மரணத்தில் மர்மம் : காவல் நிலையத்தில் கணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

414

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் கோபால்(29). இவர் மீது திருவொற்றியூர்,

சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு திருமணமாகி ஜோதிகா(23) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு பதற்றத்துடன் வந்த கோபால், தனது மனைவி வீட்டில் மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார், கோபால் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கோபாலின் மனைவி ஜோதிகா, வீட்டில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபால் மற்றும் ஜோதிகா இருவரும் திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் மேட்டு தெரு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கோபால், போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் தொண்டையினுள் ஏற்பட்ட பாதிப்பால் இறந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் காயம் எதுவும் இல்லாததால் இளம்பெண்ணை,

அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? அல்லது இளம்பெண்ணே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் கோபாலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.