கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை : நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!!

369

பொலன்னறுவை , பக்கமுன, பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (08) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

காட்டு யானை ஒன்று பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரையம் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் இரவு மற்றும் மாலை நேரங்களில் கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.