யாழ் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது திடீர் மரணம் : உடலை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!!

821

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம் (09) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் தாயின் இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.