
மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன. இதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மரணங்கள் குறைந்த பாடில்லை.
இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூடியிருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
அம்மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் தாத்ரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் துஷார். இந்த இளைஞர் ஒக்டோபர் 13-ம் திகதி அன்று தன்னுடைய பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்த போது தான் விபரீத சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையிலும், ஆபத்தை உணராமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார் துஷார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த நிலையில் துஷாரும் தண்டவாளத்தில் கீழே விழுந்தார்.
அப்போது ரயிலும் வேகமாக வந்து கொண்டிருந்ததால் பைக்கை எடுக்க முயன்ற துஷார் ரயில் நெருங்கி வந்ததும் பைக்கை விட்டுவிட்டு தண்டவாளத்தில் ஓடினார்.
ஆனால், துஷார் மீது ரயில் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Why didn’t he jump on the side ?
He died 🙁pic.twitter.com/BntfP8tRXj
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) October 13, 2025





